மானிப்பாய் கிறீன் மருத்துவமனையின் ஒருபகுதியில் இயங்கிவந்த இராணுவ முகாமின் மின்கட்டண நிலுவை 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா என்றும், அந்தத் தொகையை செலுத்தாமல் இராணுவத்தினர் முகாமைவிட்டு வெளியேறியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அண்மையில் அந்த முகாம் இராணுவத்தால் அப்புறப்படுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்தே இராணுவத்தினர் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா மின்சார நிலுவையை வைத்துவிட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் சென்றுள்ள விடயம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் பத்மதயாளன் ஆண்டகையைத் தொடர்பு கொண்டுகேட்டபோது; "சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர் குறித்த கட்டடத் தொகுதியில் தமது முகாமை இயக்கி வந்தனர்.

அந்தக் காலப்பகுதியில் முகாமின் மின் கட்டணமாக 4 இலட்சத்துக்கு 50 ஆயிரம் ரூபா நிலுவை செலுத்தப்படாமல் உள்ளது. இந்தத் தொகையை இராணுவமே செலுத்தவேண்டும் என்று கூறினார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
