யாழ்.ஆவரங்கால் பகுதியில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் நேற்று (22) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த 32 வயதான உதயகுமார் விதுஷன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
யாழ்.கரவெட்டியைச் சேர்ந்த 23 வயதான தேவமனோகரன் பிரணவன் எனும் இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில், யாழில் இருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிள் பயணித்த இளைஞன், வீதியில் மாடுகளை கூட்டி (சாய்த்து) சென்ற இளைஞனுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனும், மாடுகளை கூட்டிச் சென்ற இளைஞனும் படுகாயமடைந்த நிலையில், வீதியில் சென்றவர்கள் இருவரையும் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.
அந்நிலையில் மாடுகளை கூட்டிச் சென்ற இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
