ஜனாதிபதி தேர்தல் வாக்குப் பெட்டி வாக்கு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டதை கண்காணித்த அதிகாரிகள்.









நாளைய தினம் (21.09.2024) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்கள் மற்றும் பொலிசாருடன் முதலாம் கட்ட பேரூந்துகள் உரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு காலை 08.30 மணிக்குச் செல்வதனை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன், தேர்தலில் கடமையில் ஈடுபட்டுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பார்வையிட்டனர்.
நாளைய தினம் (21.09.2024) நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தல் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களிற்கான நியமனக் கடிதம் வழங்கும் முதலாம் கட்ட நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (20.09.2024) காலை 07.15 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
இவ் நியமனக் கடிதம் வழங்களைத் தொடர்ந்து சரியாக 08.30 மணிக்கு முதலாம் கட்ட வாக்குப் பெட்டி விநியோகம் ஆரம்பமாகியது. வாக்களிப்பு நிலையங்களுக்கு முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகளுடன் பேரூந்துகள் சென்றன.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
