வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சாவு

2 months ago



வவுனியா - மன்னார் வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் என பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

மன்னார், பறயநாலங்குளம் பகுதியில் இருந்து இரண்டு இளைஞர்கள் வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.

வவுனியா - மன்னார் வீதியில் உள்ள பம்பைமடுவை அண்டிய பகுதியில் மோட்டர் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளதுடன், அதில் பயணித்த மற்றைய நபர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் அநுராதபுரம் பகுதியை சேர்ந்த நிமல் வயது 35 என்ற நபரே மரணமடைந்தார்.

விபத்துச் சம்பவம் தொடர்பாக பூவரசன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அண்மைய பதிவுகள்