குற்றக் கும்பலைச் சேர்ந்த 3,400 க்கும் மேற்பட்டோர் கடந்த 5 மாத சோதனை நடவடிக்கைகளில் கைது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 3,400 க்கும் மேற்பட்டோர் கடந்த 5 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் 19 ஆம் திகதி முதல் 20 விசேட பொலிஸ் குழுக்கள் நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் இந்த சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இதற்கமைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு நேரடியாக ஆதரவு, திட்டமிடல் மற்றும் மறைமுக உதவி செய்ததற்காக 3,411 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொழும்பு குற்றப்பிரிவு மற்றும் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் 38 சந்தேகநபர்கள் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
