இந்திய தலைநகர் டில்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவிப்பு

இந்திய தலைநகர் டில்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவான இந்த நில நடுக்கம் இன்று திங்கள்கிழமை அதிகாலை 5:36 மணியளவில் 5 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
டில்லி, நொய்டா, குருகிராம் மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
28.59 வடக்கு அட்சரேகையிலும், 77.16 கிழக்கு தீர்க்க ரேகையிலும் அமைந்திருந்ததாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, "டில்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
அனைவரும் அமைதியாக இருக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன் பின்விளைவுகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள். நிலை மையை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்." என தெரிவித்துள்ளார்.
டில்லியில் கட்டடங்கள், வீடுகள் குலுங்கியதால் பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மாதம், நேபாளத்தில் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் அதிர்வு டெல்லி-என்.சி.ஆர். மற்றும் பல வட இந்தியப் பகுதிகளில் உணரப்பட்டது.
எவ்வாறெனினும், எந்தவொரு சொத்துக்களுக்கும் அங்கு சேதம் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
