முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் வெள்ளப் பெருக்கினால் நிலத்தில் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் சில வெளிக்கிளம்பின
4 months ago

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நிலத்தில் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் சில வெளியில் தென்பட்டுள்ளன.
முள்ளிவாய்க்கால் பகுதியில் இந்த வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி முறைப்பாட்டிற்கமைய, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த பகுதியினை அடையாளப்படுத்தியுள்ளார்கள்.
இது விடுதலைப் புலிகள் காலத்தில் நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
அண்மையில் பெய்த கடும் மழைவெள்ளம் நிலத்தினை அரித்து பாய்ந்துள்ளது.
இதனால் இந்த வெடிபொருள் எச்சங்கள் தென்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றின் அனுமதிபெற்று குறித்த வெடிபொருட்களை சிறப்பு அதிரடிப்படையினரிடம் பாரப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
