மட்டக்களப்பு காத்தான்குடியில் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 97 பேர் பொலிஸார் நடத்திய சுத்திவளைப்பு தேடுதலில் கைது


குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 97 பேர் காத்தான்குடி பொலிஸார் நடத்திய திடீர் சுத்திவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம். ரத்நாயக்கவின் பணிப்புரையின் பேரில் காத்தான்குடி குற்றத்தடுப்புப் பொலிஸார் மற்றும் போதை ஒழிப்புப் பிரிவினர் குறித்த தேடுதல் நடவடிக்கைகளை காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்களில் மேற்கொண்டிருந்தனர்.
காத்தான்குடி, புதிய காத்தான்குடி, நாவற்குடா, கல்லடி, புதுக்குடியிருப்பு, தாளங்குடா, ஆரையம்பதி உட்பட பல இடங்களில் இவ்வாறு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 10 பேரும், கசிப்பு விற்பனை மற்றும் தயாரிப்பில் ஈடுபட்ட 60 பேரும், அதிவேகமாக வாகனம் செலுத்தியமை உட்பட வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 27 பேருமாக மொத்தம் 97 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
