


இந்தியா, பிரித்தானியா, சீனா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தின் முதல் 4 நாட்களில் மாத்திரம் 21 ஆயிரத்து 298 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இதன்படி, இந்தியாவிலிருந்து 5 ஆயிரத்து 245 பேரும், பிரித்தானியாவிலிருந்து ஆயிரத்து 741 பேரும், சீனாவிலிருந்து ஆயிரத்து 422 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 10 இலட்சத்து 31 ஆயிரத்து 547 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
