வாஸ்கோடகாமா அதி சொகுசு பயணிகள் கப்பல் நேற்றுக் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

4 months ago



வாஸ்கோடகாமா என்ற அதி சொகுசு பயணிகள் கப்பல் நேற்றுக் காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

689 பயணிகள் மற்றும் 460 பணியாளர்களுடன் குறித்த கப்பல் இந்தியாவில் இருந்து நாட் டுக்கு வருகை தந்துள்ளது.

இது ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் இந்தியாவிலிருந்து கொழும்பு, காலி மற்றும் திருகோணமலைக்கு செல்லும் பயணிகளை சுமந்து வந்துள்ளது.

போர்த்துக்கல் கொடியுடன் வந்துள்ள இந்த பயணிகள் கப்பல் இன்று இரவு இந்தோனேஷியா நோக்கி புறப்படும். 

அண்மைய பதிவுகள்