கடந்த காலங்களை மறந்து மீண்டும் கட்சியில் இணையவேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் எம்.பிக்களுக்கு மஹிந்த அழைப்பு
4 months ago

கடந்த காலங்களை மறந்து மீண்டும் கட்சியில் இணையவேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
பொதுஜன பெரமுனக் கட்சி உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர்களை மஹிந்த ராஜபக்ச கடந்த திங்கட்கிழமை தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துக் கலந்துயைாடினார்.
அதிலேயே இந்தப் பகிரங்க அழைப்பை விடுத்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர்கள் 20 பேர் கலந்துகொண்டுள்ளனர்.
கட்சி மட்டத்தில் அனைவரையும் ஒன்றிணைத்து பேச்சுகளில் ஈடுபட்டுவதற்கு மூத்த உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு ஒன்றை நியமிப்பது தொடர்பாகவும் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
