
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியவர்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளை ரிஷாத் பதியுதீனும், குறைந்த விருப்பு வாக்குகளை செல்வம் அடைக்கலநாதனும் பெற்றுள்ளனர்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வவுனியா, மன்னார். முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட ரிஷாத் பதியுதீன் அதிகபட்சமாக 21 ஆயிரத்து 18 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
குறைந்த விருப்பு வாக்குகளாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் போட்டியிட்ட செல்வம் அடைக்கலநாதன் 5 ஆயிரத்து 695 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார்.
மேலும், இலங்கைத் தொழிலாளர் கட்சியில் காதர் மஸ்தான் 13 ஆயிரத்து 511 விருப்பு வாக்குகளையும், இலங்கைத் தமிழரசுக் கட்சியில் துரைராசா ரவிகரன் 11ஆயிரத்து 215 விருப்பு வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியில் செ.திலகநாதன் 10 ஆயிரத்து 652 விரும்பு வாக்குகளையும், ம.ஜெகதீஸ்வரன் 9 ஆயிரத்து 280 விருப்பு வாக்குகளையும் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
