இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபை நேரடியாகப் பங்கேற்காமல் இருக்க முடிவெடுத்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபை நேரடியாகப் பங்கேற்காமல் இருக்க முடிவெடுத்துள்ளது.
அதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் பயன்படுத்திய சங்கு சின்னத்தை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகளிடம் தமிழ் மக்கள் பொதுச் சபை வேண்டு கோள் விடுத்துள்ளது.
தமிழ்மக்கள் பொதுச் சபையின் கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீமானங்கள் எடுக்கப்பட்டன.
கடந்த 26ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடிய தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவது என்ற யோசனையை முன்வைத்தது.
இந்நிலையில், இது தொடர்பில் முடிவெடுப்பதற்குத் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபை இரண்டு நாட்கள் கால அவகாசம் கோரியிருந்தது.
இது தொடர்பில் முடிவை எடுக்கும் முகமாக தமிழ் மக்கள் பொதுச் சபையின் கலந்துரையாடல் நேற்று திருகோணமலை, உப்புவெளியில் அமைந்துள்ள ஆயர் இல்ல மண்டபத்தில் இடம்பெற்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபையும், தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து ஒரு தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பை உருவாக்கி, பொது வேட்பாளரைக் களம் இறக்கின.
ஆனால், அதுபோல் நாடாளுமன்றத் தேர்தலில் நேரடியாகப் பங்கேற்பதில்லை என்று தமிழ் மக்கள் பொதுச் சபை முடிவு எடுத்துள்ளது.
மேலும், பொதுச் சின்னமாகிய சங்கு சின்னத்தை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகளிடம் கேட்பது என்றும் தமிழ் மக்கள் பொதுச் சபை தீர்மானித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
