யாழ்.காங்கேசன்துறை அஞ்சல் பணிமனை சுமார் 34 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
7 months ago

யாழ்.காங்கேசன்துறை அஞ்சல் பணிமனை சுமார் 34 வருடங்களின் பின்னர் மீண்டும் காங்கேசன்துறையில் சேவையை ஆரம்பித்துள்ளது.
போர் காரணமாக 1990ஆம் ஆண்டு காங்கேசன்துறையிலிருந்த மக்கள் இடம்பெயர்ந்தனர்.
இதன்போது, காங்கேசன்துறை அஞ்சல் பணிமனையும் இடம் பெயர்ந்தது.
காங்கேசன்துறை உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டமையை தொடர்ந்து அஞ்சல் அலுவலகம் தற்காலிகமாக மாவிட்டபுரத்தில் தற்காலிகமாக இயங்கி வந்தது.
இந்த நிலையிலேயே, காங்கேசன்துறை அஞ்சல் பணிமனையின் சேவை மீண்டும் காங்கேசன்துறையிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
அதன் சொந்தக் காணியில் இருந்த கட்டடம் அழிவடைந்துள்ள நிலையில் தற்போது வாடகைக்கு பெறப்பட்ட கட்டடத்திலிருந்து அஞ்சல் பணிமனையின் சேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
