
யாழ்.நல்லூர்ப் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள 64 சட்டவிரோதக் கட்டடங்கள் தொடர்பாக நல்லூர்ப் பிரதேச சபையால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கடந்த 2016 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் 64 சட்டவிரோதக் கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில் 57 சட்டவிரோதக் கட்டடங்கள் சட்ட ஏற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு தண்ட அறவீடுகளுடன் அனுமதிக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை 7 சட்டவிரோதக் கட்டடங்கள் மீதான வழக்கு விசாரணைகள் தொடர்கின்றன.
இதுவரை குறித்த கட்டடங்களை இடிப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் வழக்குப் பரிசீலனையில் உள்ளதாகவும் நல்லூர்ப் பிரதேசசபை தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
