யாழ்.கச்சேரி - நல்லூர் வீதியில் ஒரு வீட்டில் 8 அடி நீளமான முதலை ஒன்று புகுந்தமையால் அப்பகுதியில் பரபரப்பு
6 months ago


யாழ்.கச்சேரி - நல்லூர் வீதியில் உள்ள மூத்த விநாயகர் கோவிலுக்கு அண்மையில் 8 அடி நீளமான முதலை ஒன்று புகுந்தமையால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்றையதினம் (23.11.2024) இடம்பெற்றுள்ளது.
முதலை உயிருடன் இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்திருந்த நிலையில் அப்பகுதிக்கு வருகைதந்த உத்தியோகத்தர்களால் முதலை உயிருடன் பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், யாழ் மாவட்டத்தில் நிலவி வரும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக அருகில் உள்ள நீர்நிலைகளில் இருந்து குறித்த முதலை ஊருக்குள் வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
