43 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை இளைஞர்கள் முன்னெடுப்புகளை மேற்கொண்டிருந்த போது இராணுவ புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலால் அந்த முயற்சியைக் கைவிட்டுள்ளனர்.
யாழ்.பொதுநூலக எரிப்பின் 43 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை பொதுநூலகத்தின் முன்பாகத் தனியாகக் கடைப்பிடிப்பதற்கு உரும்பிராயைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் இணைந்து முன்னெடுப்புகளை மேற்கொண்டிருந்த போது இராணுவ புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலால் அந்த முயற்சியைக் கைவிட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் (01) காலை 9.30 மணியளவில் யாழ்.பொது நூலக எரிப்பு நினைவேந்தல் நிகழ்வைக் கடைப்பிடிப்பது எனத் தீர்மானித்து இது தொடர்பான தகவலை சமூக ஊடகங்களிலும் வெளியிட்டிருந்தனர்.
இதுதொடர்பாகத் தகவலறிந்த இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை முன்னின்று வழிநடத்திய இளைஞருடன்பல தடவைகள் கான்போனில் தொடர்பு கொண்டு நிகழ்வு தொடர்பாக வினவியுள்ளனர்.
புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக இளைஞர்கள் தாம் நடத்தத் தீர்மானித்திருந்த யாழ்.பொதுநூலக எரிப்பு நினைவேந்தல் கடைப்பிடிப்பைக் கைவிட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
