ஈழத் தமிழின விடுதலைப்போராட்டத்தின் முன்னோடியும், முதற் தற்கொடையாளருமான தியாகி பொன். சிவகுமாரனின் 50ஆவது ஆண்டுநினைவேந்தல் நிகழ்வு நாளை(05) புதன்கிழமை காலை 9 மணியளவில் உரும்பிராய்ச்சந்திக்கு அருகில் அமைந்துள்ள பொன். சிவகுமாரனின் நினைவிடத்தில் தியாகி பொன். சிவகுமாரன் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

பொன்.சிவகுமாரனின் சகோதரி சிவகுமாரி ஈகச்சுடரேற்றி நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைப்பார்.
அதனைத்தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகளும், நினைவஞ்சலிக் கூட்டமும் இடம்பெறும்.
நிகழ்வில் உரும்பிராயைச் சேர்ந்த பொருளாதார நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த 50 பேருக்குப் புத்தாடைகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

அத்துடன் சிவகுமாரனின் உருவச்சிலைக்கு முன்பாகத் தாகசாந்தி நிலையம் அமைக்கப் பட்டு மக்களின் தாகம் தீர்க்கும் பணியும் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, தியாகி பொன். சிவகுமாரனின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொண்டு அஞ்சலிக்குமாறு தியாகி பொன்.சிவகுமாரன் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
