யாழ்.வடமராட்சி பகுதிகளில் சைக்கிள்களைத் திருடிய நபரொருவர் பொலிஸாரால் கைது.-- 12 சைக்கிள்கள் மீட்பு

3 months ago



யாழ்ப்பாணம் - வடமராட்சியின் பல்வேறு பகுதிகளில் சைக்கிள்களைத் திருடிய நபரொருவர் நேற்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கரணவாய் பகுதியைச் சேர்ந்த 23 வயதானவரே காங்கேசன்துறை மாவட்ட பொலிஸ் குற்றதடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி மு.உதயானந்த் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டார்.

களவுச் சம்பவமொன்று தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது பல்வேறு பகுதிகளிலும் சைக்கிள்களைத் திருடிய சம்பவங்களுடன் சந்தேகநபர் தொடர்புபட்டமை தெரியவந்தது.

இதனையடுத்து சந்தேக நபர் வழங்கிய தகவலுக்கமைய 12 சைக்கிள்கள் மீட்கப்பட்டன.

கைதான சந்தேகநபரை கைப்பற்றப்பட்ட சைக்கிள்களுடன் நெல்லியடி பொலிஸார் ஊடாக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்