மன்னாரில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை சந்தித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பு, சாள்ஸ் நிர்மலநாதனின் இல்லத்தில் இடம்பெற்றது.
இதன் போது, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் இணைந்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை இளைஞர் அணியினர் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்களுடன், ஜனாதிபதி கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இந்த சந்திப்பு தொடர்பில், பாராளு மன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனிடம் வினவியபோது,
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் ஜனாதிபதி தேர்தலில், ஒட்டு மொத்த மன்னார் மக்களின் முடிவே, தனது முடிவு எனவும், மக்கள் யார் பக்கமோ, அவர்களின் பக்கமே தான் எனவும் குறிப்பிட்டார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
