யாழில் இருந்து திருகோணமலை சிமெந்து தொழிற்சாலைக்கு சட்டவிரோதமாக கற்களை ஏற்றிச் சென்ற டிப்பரை வழிமறித்த எம்.பி க. இளங்குமரன்

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சிமேந்து உற்பத்தித் தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் கண்ட கற்களை ஏற்றிச் சென்ற டிப்பரை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து வழிமறித்த பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்
அண்மைய நாட்களில் மந்துவில் பிரதேசத்தில் இருந்து, யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல்யமான கட்டடப்பொருள் விற்பனை செய்யும் வர்த்தகருக்கு சொந்தமான பாரவூர்தி மூலமாக சட்டவிரோதமான முறையில் கண்டகற்களை அகழ்ந்து செல்வதாக பிரதேச மக்களால் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது நேற்று முன்தினம் இரவு 10.15 மணியளவில் நுணாவில் பகுதியில் வைத்து குறித்த வர்த்தகருக்கு சொந்தமான டிப்பரை மறித்து சோதனையிட்ட போது அனுமதிப்பத்திரம் இன்றி கற்கள் ஏற்றிச்சென்றமை கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குறித்த டிப்பர் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
