
பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியான முறையில் நேற்று நடைபெற்றது.
நாட்டில் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான தபால் மூல வாக்களிப்பு நேற்று நாடு முழுவதும் ஆரம்பமானது.
நாளை வெள்ளிக்கிழமையும் எதிர்வரும் 4ஆம் திகதியும் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
இந்த மூன்று நாட்களிலும் வாக்களிக்கத் தவறியவர்கள் எதிர்வரும் நவம்பர் 7, 8ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும்.
இந்த நிலையில், நேற்றையதினம் முல்லைத்தீவில் மாவட்ட செயலகம், மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையங்கள் அடங்கலாக 11 வாக்களிப்பு நிலையங்களில் தபால் மூல வாக்களிப்பு நடை பெற்றது.
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் முல்லைத்தீவு தொகுதியில் 3 ஆயிரத்து 947 பேர் தபால் மூலம் வாக்களிப்பதற்கு இந்தத் தேர்தலில் தகுதி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
