கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த துறை முகங்கள், விமான சேவைகள் அமைச்சு தீர்மானிப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த துறை முகங்கள், விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள், விமான சேவைகள் பிரதியமைச்சர் ருவன் கொடிதுவக்கு தெரிவித்தார்.
இதனிடையே, அதானி நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் மேற்கு முனைய அபிவிருத்தி பணிகளை அடுத்த மாதத்துக்குள் நிறைவு செய்ய முடியுமெனவும் அவர் கூறினார்.
இந்த இரு முனையங்களின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தவுடன் கொழும்பு துறைமுகத்தின் வருடாந்த கொள் கலன் நடவடிக்கை கொள்ளளவு 8 மில்லியனிலிருந்து 13 மில்லியனாக அதிகரிக்குமென துறைமுகங்கள், விமான சேவைகள் பிரதியமைச்சர் ருவன் கொடிதுவக்கு குறிப்பிட்டார்.
இது நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் சர்வதேச சந்தைக்கும் வலுவான பிரவேசமாக அமையுமென அவர் மேலும் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
