கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த துறை முகங்கள், விமான சேவைகள் அமைச்சு தீர்மானிப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த துறை முகங்கள், விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள், விமான சேவைகள் பிரதியமைச்சர் ருவன் கொடிதுவக்கு தெரிவித்தார்.
இதனிடையே, அதானி நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் மேற்கு முனைய அபிவிருத்தி பணிகளை அடுத்த மாதத்துக்குள் நிறைவு செய்ய முடியுமெனவும் அவர் கூறினார்.
இந்த இரு முனையங்களின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தவுடன் கொழும்பு துறைமுகத்தின் வருடாந்த கொள் கலன் நடவடிக்கை கொள்ளளவு 8 மில்லியனிலிருந்து 13 மில்லியனாக அதிகரிக்குமென துறைமுகங்கள், விமான சேவைகள் பிரதியமைச்சர் ருவன் கொடிதுவக்கு குறிப்பிட்டார்.
இது நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் சர்வதேச சந்தைக்கும் வலுவான பிரவேசமாக அமையுமென அவர் மேலும் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
