இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த நான்கு விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
4 months ago

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சூழவுள்ள பகுதியில் இன்று காலை நிலவிய பனிமூட்டமான வானிலை காரணமாக நான்கு விமானங்கள் தரையிறங்குவதற்காக வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன.
பனியுடனான வானிலை காரணமாக விமானிகளால் ஓடுபாதையைச் சரியாக அவதானிக்க முடியாமையினால் குறித்த விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன.
டுபாய், சீனா, இந்தியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்குப் பயணித்த விமானங்களே இவ்வாறு வழி மாற்றப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் பனியுடனான வானிலை சீரடைந்ததன் பின்னர் குறித்த விமானங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
