யாழ்.வடமராட்சி - குடத்தனைப் பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நேற்று மேற்கொண்ட சிறப்புச் சுற்றிவளைப்பின்போது, பல்வேறு குற்றச்செயல்களு டன் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
மருதங்கேணிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் இந்தச் சிறப்புச் சுற்றிவளைப்பும் கைது நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வாள்வெட்டு, கசிப்புக் காய்ச்சுதல் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களுடன் தொடர்புடையவர்களே கைது செய்யப்பட்டவர்களாவர்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
