பிறந்து மூன்று மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
3 months ago

பிறந்து மூன்று மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
பன்னாலை, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த பங்கஜன் சிறீதிகன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இந்த குழந்தைக்கு கடந்த 24ஆம் திகதி காய்ச்சல், இருமல், சளி ஏற்பட்டது.
அதற்கு சிகிச்சை வழங்குவதாக பெற்றோர் குழந்தையை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்ட வேளை மேலதிக சிகிச்சைக்காக குழந்தை நேற்று முன்தினம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
இருதய செயலிழப்பு காரணமாக குழந்தை உயிரிழந்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
