
கனடாவில் சம்சுங் ரக இலத்திர னியல் அடுப்புக்கள் தொடர்பில் எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அடுப்பு வகையை பயன் படுத்தும் மக்கள் தீ விபத்துக்கு உள்ளாவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனடாவில் சில அடுப்புகளில் தன்பாட்டில் தீப்பற்றி கொண்டதில் சிலர் காயமடைந்துள்ளனர்.
சுகாதார நிறுவனம் இந்த அடுப்பு வகைகளை சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளுமாறு நிறுவனத்திற்கு அறிவித்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரையில் விற்பனை செய்யப்பட்ட சுமார் 3,26,250 அடுப்புக்கள் இவ்வாறு பாதிப்பை எதிர்நோக்குகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அடுப்புக்களின் எரியும் பகுதி தானாக இயங்குவதால் விபத்துக்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
எனவே இந்த அடுப்பு வகைகளை சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீ பற்றிக் கொள்வதைத் தவிர்க்கும் நோக்கில் சம்சுங் நிறுவனம் வாடிக் கையாளர்களுக்கு விசேட கருவிகளை வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அடுப்புக்கள் தானாக தீப்பற்றி கொண்ட 57 சம்பவங்கள் பதிவாகி யுள்ளன. விபத்துக்கள் காரணமாக ஏழு பேர் இதுவரையில் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
