யாழ்.கைதடியில் பூசகரை மோசமாக தாக்கி பணம் நகை பறித்த கும்பல் சிக்கியது, திருட்டுப் பொருட்களும் மீட்கப்பட்டன

யாழ்.சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடிப் பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தில் வைத்து கடந்த புதன்கிழமை பூசகரைத் தாக்கி பணம், நகை அபகரித்த குழுவை சாவகச்சேரிப் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
இதன்போது பூசகரிடம் இருந்து பறிக்கப்பட்ட ஒன்றரைப் பவுண் சங்கிலி, 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பூசகருடைய சங்கிலியை விற்றுப் பெற்ற 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை பொலிஸார் மீட்டனர்.
பெண் ஒருவர் உட்பட மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு திருட்டுச் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையிலான பொலிஸ் குழுவினரே மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை கடும் மழையுடனான காலநிலை நிலவிய நிலையில் மேற்படி கொள்ளைக் குழு ஆலயத்தில் கடமையில் இருந்த பூசகரை கத்தி மற்றும் பொல்லுகளால் தாக்கி படுகாயப்படுத்தி நகை மற்றும் பணத்தை அபகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
