கனடாவில் சர்வதேச மாணவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனடாவில் சர்வதேச மாணவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரம்டன் நகர நிர்வாகம், மத்திய அரசாங்கத்திடம் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
பிரம்டனில் சர்வதேச மாணவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதாகவும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
சர்வதேச விமான நிலையம், பிரதான அதிவேக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் பிரம்டனில் நகரில் காணப்படுகின்றன.
கனடாவில் அதிக எண்ணிக்கையிலான சர்வதேச மாணவர்கள் தங்கியிருக்கும் நகரமாக பிரம்டன் காணப்படுகின்றது என நகர மேயர் பெற்றிக் பிறவுண் தெரிவித்துள்ளார்.
சிலர் இணைய வழியில் சர்வதேச மாணவர்களை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் பதிவுகளை இடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தங்குமிட வசதிகளை வழங்குவதற்கு பிரதியுபகாரமாக மாணவர்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக நேரிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் மத்திய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
