வவுனியா வைத்தியசாலையில் பதவியாவைச் சேர்ந்த கர்ப்பவதியொருவர் அறுவைச் சிகிச்சை மூலம் 4 குழந்தைகளைப் பிரசவித்தார்
6 months ago

வவுனியா வைத்தியசாலையில் பதவியாவைச் சேர்ந்த கர்ப்பவதியொருவர் நேற்று முன்தினம் இரவு பிரசவ வலியுடன் சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலம் 4 குழந்தைகள் பிரசவித்தன.
மேற்படி தாயார் மகப்பேற்று வைத்திய நிபுணர் காமினியால் தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு வந்துள்ளதுடன் அவரது மகப்பேற்று வைத்திய விடுதியாகிய 7ஆம் விடுதியில் சேர்க்கப்பட்டு வைத்தியர் திலீபனால் சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு நான்கு குழந்தைகளும் பிரசவித்தன.
குறிப்பாக வவுனியா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிரசவிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
மேற்படி தாயாரும் குழந்தைகளும் நலமாகவுள்ளதுடன், நான்கு குழந்தைகளும் சிறப்பு குழந்தை நலப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
