குஷ் போதைப் பொருளுடன் பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரியை கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.
8 months ago

பிரித்தானிய பிரஜை ஒருவரினால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட குஷ் போதைப்பொருள் ஒரு தொகுதியை கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
43 கிலோ மற்றும் 600 கிராம் எடை கொண்ட இந்த போதைப்பொருள், சுங்க வரலாற்றில் மிகப்பெரிய குஷ் போதைப்பொருள் சோதனை என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளில் இந்த போதைப்பொருள் காணப்பட்டதாகவும் அவற்றின் பெறுமதி 44 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாகவும் சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
21 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் பிரித்தானிய பாதுகாப்பு சேவை அதிகாரி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
