ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க பாராளுமன்றத்தை கலைத்து விசேட வர்த்தமானியை நேற்றிரவு வெளியிட்டார்.
8 months ago

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க பாராளுமன்றத்தை கலைத்து விசேட வர்த்தமானியை நேற்றிரவு வெளியிட்டார்.
அந்த விசேட வர்த்தமானியில், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசமைப்பின் 70ஆம் உறுப்புரையில் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்ட தத்துவங்களுக்கு அமைவாகவும் 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க, பாராளுமன்றத் தேர்தல்கள் சட் டத்தின் 10ஆம் பிரிவின் ஏற்பாடுகளை பின்பற்றி யும் 2024 செப்ரெம்பர் 25ஆம் திகதி நள்ளிரவிலிருந்து பாராளுமன்றத்தைக் கலைத்து, 2024 நவம்பர் 21ஆம் திகதி பாராளு மன்றத்தை கூட்டவும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
அத்து டன், எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் திகதியாக நிர்ணயிக்குமாறும் ஒக்ரோபர் 4 முதல் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனு தாக்கல் காலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
