











யாழில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தைப்பொங்கல் விழாவை ஆண்டுதோறும் சிறுதானியப் பொங்கல் விழாவாகக் கொண்டாடி வருகிறது.
இராசபோசனம் என்ற கருப்பொருளில் நடைபெறும் இச் சிறுதானியப் பொங்கல் விழா இம்முறை யாழ்.ஊரெழு வளர்பிறை சனசமூக நிலைய முன்றலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16.02.2025) மாலை மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
வளர்பிறை சனசமூக நிலையத்தின் தலைவர் மு. ஐங்கரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் பங்கேற்றிருந்தார்.
சிறப்பு விருந்தினர்களாகப் பசுமை இயக்கத்தின் கலை, இலக்கிய அணியின் துணைச் செயலாளர் கை. சரவணன், சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் த.யுகேஸ், பொருளாளர் க.கேதீஸ்வரநாதன் நாவலம்பதி ஞானவைரவர் ஆலயத்தின் தலைவர் இ.ராதா ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான உறியடியோடு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்ற இச்சிறுதானியப் பொங்கல் விழாவில் சாமை மற்றும் வரகு அரிசிப் பொங்கல்களும் குரக்கன் கூழும் பரிமாறப்பட்டன.
தமிழர்களின் உணவுப் பண்பாட்டில் சிறுதானியங்கள் அருகிவரும் நிலையில், மீளவும் அவற்றின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கிலேயே சிறுதானியப் பொங்கல்விழா தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் ஆண்டுதோறும் எழுச்சிபூர்வமாக கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
