யாழ்.நகரில் உள்ள நகைக் கடைக்குள் அத்துமீறி நுழைந்த மூவர், 30 லட்சம் ரூபாவை கொள்ளையிட்டுச் சென்றனர்.
4 months ago

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் உள்ள நகைக் கடைக்குள் அத்துமீறி நுழைந்த மூவர், 30 லட்சம் ரூபாவை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
ஹைஏஸ் வாகனத்தில் வந்த மூவர், தங்களை பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் என்று அடையாளப்படுத்தி கடையைப் பூட்டிவிட்டு கடையில் இருந்தவர்களை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதையடுத்தே கடையில் வைக்கப்பட்டிருந்த 30 லட்சம் ரூபாவைக் கொள்ளையிட்டுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் முறையிட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
