சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசு தீர்மானம்.-- விஜித ஹேரத் தெரிவிப்பு
5 months ago

சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
ஒரு குறிப்பிட்ட முறைப்படி வாகன இறக்குமதி செயல்முறையை அனுமதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதற்கு மத்திய வங்கியும் இணக்கம் தெரிவித்துள்ளது.
எனவே, எதிர்காலத்தில் அதற்கான முறையான நடைமுறையை தயாரித்து, பொது மக்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
