மேல் மாகாணத்தில் பதிவான ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் வடக்கு மாகாணத்திலும் பதிவாகியுள்ளது.-- சுகாதார பணிப்பாளர் தெரிவிப்பு
7 months ago

மேல் மாகாணத்தில் பதிவான ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் வடக்கு மாகாணத்திலும் பதிவாகியுள்ளதாக மேல்மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளர் கே.கே.சரத் தெரிவித்தார்.
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் இறப்பு விகிதம் மிக அதிகமாக இருக்கின்றன என்றும் இந்த நோயைக் கட்டுப்படுத்த மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேல் மாகாணத்தில் 4 பண்ணைகளில் மேற்படி ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பதிவாகியுள்ளது. அத்துடன் இது, வடக்கு, ஊவா, வடமேல் மாகாணங்களிலும் பதிவாகியுள்ளது.
கடந்த வார தரவுகளின்படி, மேல் மாகாணத்தில் சுமார் 70 ஆயிரம் பன்றிகள் உள்ளன. இவற்றில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை இந்த நோயால் இறந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
