2024 மார்ச்சில் இருந்து 9 மாதங்களில் பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டகிராம், டிக்டொக் பாவனையாளர் எண்ணிக்கை ஐந்து இலட்சமாக அதிகரிப்பு

2 months ago


கடந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து ஒன்பது மாதங்களில் பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டகிராம், டிக்டொக் ஆகிய பாவனையாளர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சமாக அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் இறுதியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் காலங்களில் சமூக ஊடக பாவனையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு கட்சியினரும் தமக்கென மேலதிகமாக சமூக ஊடக கணக்குகளை ஆரம்பித்து அதன் மூலம் பிரசாரங்களை மேற்கொண்டிருந்தனர்.

நாட்டின் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் சமூக ஊடகங்களை பாவிப்பதானது உலகில் வேறு எங்கும் இல்லையெனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

அண்மைய பதிவுகள்