கனடா அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எம்.பிகளுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.

3 months ago




கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சந்திப்பு நடைபெற்றது.

கொழும்பு, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகம் குகதாசன், ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி ஸ்ரீநாத் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்