இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 30 பேர் விளக்கமறியல்.-- சட்டமா அதிபர் திணைக்கள தரவு

இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் தரவுகளின் படி கடந்த ஏப்ரல் மாதம் வரையான காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய குற்றங்களுக்காக 6 பேரும், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக 24 பேரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாகக் கேட்டுப்பெற்ற தகவல்களின் அடிப்படையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், வைக்கப்பட்டுள்ளவர்களை விட, 34 பேர் வழக்குத் தொடரப்படாமல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை வழக்குத் தொடரப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49ஆக , 2020 2023ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் முழுமையாக விடுவிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 81ஆகவும் காணப்படுகின்றது.
அதேபோன்று உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றங்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விட, 34 பேர் வழக்குத் தொடரப்படாமல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு 54 பேர் வழக்குத் தொடரப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளர்.
2019-2023 வரையான காலப் பகுதியில் 365 பேர் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
