யாழ்ப்பாணம் வந்த இந்திய அதிகாரிகள் குழு ஒன்று நேற்று தமிழ்த் தேசிய அரசியல் கட்சி ஒன்றின் தலைவரை சந்தித்து இரகசிய பேச்சில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலாலி விமான நிலையம் ஊடாக நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வந்த இந்திய அதிகாரிகள் குழுவே தமிழ்த் தேசிய அரசியல் கட்சி ஒன்றின் தலைவரை இரகசியமாக அவரின் இடத்தில் சந்தித்துவிட்டு திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தத் தமிழ்த் தலைவரிடம் உடனடியாகவே சந்திப்புக்கு அனுமதி பெறப்பட்டு, மூடிய அறைக்குள் சில நிமிடங்கள் இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும் இதன் போது, தமிழ் பொதுவேட்பாளர் குறித்து பேசப்பட்டதாகவும் அறிய வருகின்றது
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
