
வவுனியாவில், இளம் குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
குறித்தப் பெண் தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (29) இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செட்டிகுளம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட அந்த பெண்ணை, அயலவர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.
எனினும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
