திருகோணமலையில் மக்களின் காணிகளை அவர்களுக்கே கொடுக்க நடவடிக்கை.--அமைச்சர் அருண் ஹேமச்சந்ர தெரிவிப்பு


திருகோணமலையில் மக்களின் காணிகளை அவர்களுக்கே கொடுக்க நடவடிக்கை.--அமைச்சர் அருண் ஹேமச்சந்ர தெரிவிப்பு
பொது மக்களின் காணிகள் அவர்களுக்கே உரித்தானது. அதனை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு அரசு என்ற வகையில் வழங்க வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்கவே நாம் உழைக்கின்றோம்.
நாடு பூராகவும் உள்ள அரச காணிகள் தொடர்பில், அவற்றை பயன்படுத்துவது தொடர்பில் இருக்கக் கூடிய அனைத்து தடைகளையும் நீக்கி திருகோணமலை உட்பட அனைத்து பகுதிகளிலும் ஒரு சீரான காணி வழங்கல் நடைமுறையை ஏற்படுத்த உள்ளோம்.
இவ்வாறு நேற்று (24) நடைபெற்ற திருகோணமலை மாவட்ட முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புத் துறை பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்ர கூறினார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்ற பின்னரான திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முதலாவது கூட்டம் நேற்று (24) மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் வெளிநாட்டு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புத்துறை பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்ர தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்தணசேகர, ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அக்மீமன ரொஷான் பிரிய சஞ்ஞன, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், அரச அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி, மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.ரத்னாயக்க மற்றும் அனைத்து மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களதும் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், பாதுகாப்புத் தரப்பினர், பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதே வேளை 5 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக ஊடக செய்தியாளர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கு பற்றி செய்திகளை சேகரிக்க அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
