
வீதிச்சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்று தருமபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று அதிகாலை விசுவமடு, சுண்டிக்குளம் சந்திப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்களை மறித்துச் சோதனையிட முயன்றபோது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் கண்ணாடிப் போத்தல் ஒன்றால் பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கி விட்டுத் தப்பியோடினர் என்று கூறப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய தருமபுரம் பொலிஸார், சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்துள்ளதுடன், இரு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்களை இன்று நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று தருமபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.சதுரங்க தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
