மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகயா ரயிலில் மோதுண்டு 06 காட்டு யானைகள் உயிரிழந்தன
1 month ago







மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகயா ரயிலில் மோதுண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இன்று (20) இடம்பெற்றுள்ளது.
கல்லோயா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள மேற்படி அனர்த்தத்தில் 6 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்லோயா ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று திகாலை 3.00 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், மேலும் இரு யானைகள் காயமடைந்துள்ளன என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்படி விபத்து காரணமாக அந்த பிரதேசத்தில் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதுள்ளதாகவும், நிலைமை விரைவில் சீர் செய்யப்படும் என்றும் ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
