வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வரும் பாதாள உலகக்குழுத் தலைவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வரும் பாதாள உலகக்குழுத் தலைவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 164 பாதாள உலகக்குழு தலைவர்கள் வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த சந்தேகநபர்களை கைது செய்து நாட்டுக்கு அழைத்து வர விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களம் என்பன கூட்டாக இணைந்து இந்த திட்டத்தை எதிர்வரும் மாதங்களில் நடைமுறைப்படுத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குற்றவாளிகளை கைது செய்து நாட்டுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் திணைக்களமும் வெளிவிவகார அமைச்சும் கூட்டாக இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை மூலம் பாதாள உலகக் குழுத் தலைவர்களான கஞ்சிபானை இம்ரான், லொகு பெட்டி, ரொட்டம்பே அமில உள்ளிட்ட ஐந்து முக்கிய பாதாள உலகக்குழு தலைவர்கள் பெலாரஸ் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவிதமாக டுபாய், பிரான்ஸ், இந்தியா, இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட தலைமறைவாக வாழ்ந்து வரும் பாதாள உலகக்குழுத் தலைவர்களை கைது செய்து நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
