கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கு முன்பாக 50 மீற்றர் தூரத்திலுள்ள மைதானத்துக்குச் செல்லும் பாதை இராணுவம் ஆக்கிரமிப்பில்

கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கு முன்பாக 50 மீற்றர் தூரத்திலுள்ள மைதானத்துக்குச் செல்லும் பாதை இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ளது.
இதனால் மாணவர்கள் ஒரு கிலோமீற்றர் வரை நடந்தே சென்று மைதானத்தை அடைகின்றனர் என்று பாடசாலைச் சமூகம் விசனம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் பாடசாலையின் நிகழ்வுகளுக்கு மைதானத்துக்குச் செல்லவேண்டுமாயின் பாடசாலையின் வீதிக்கு வருகை தந்து அங்கிருந்து ஏ -9 பிரதான வீதி வழியாக மத்திய விளையாட்டு மைதானத்தை ஊடறுத்து கிளிநொச்சி மகாவித்தியாலய மைதானத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது.
இதனால் மாணவர்கள் மைதானத்துக்குச் சென்று வருவதிலேயே களைப்புற்று சோர்வடைகின்றனர்.
மைதானத்துக்குச் செல்லும் பாதையை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனரென்பதால் மாணவர்களுக்கு இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நீண்டகாலமாக பல்வேறு தரப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்தபோதிலும் இதுவரை குறித்த பாதையை இராணுவம் விடுவிக்கவில்லை.
எனவே புதிய அரசு இந்த விடயத்தைக் கவனத்தில் எடுத்து மாணவர்களின் நன்மை கருதி குறித்த பாதையை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பாடசாலைச் சமூகம் கோரியுள்ளது.
(F-214)
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
