வவுனியாவில் ரான்ஸ்பரன்ஸி இன்ரநெசனல் நிறுவனத்தால் இளைஞர்களுக்கு இடையே நடத்தப்பட்ட கட்டுரை போட்டிக்கான பரிசளிப்பு விழா

4 months ago



சர்வதேச இலஞ்ச ஊழல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ரான்ஸ்பரன்ஸி இன்ரநெசனல் நிறுவனத்தால் இளைஞர்களுக்கு இடையே நடத்தப்பட்ட கட்டுரை போட்டிக்கான பரிசளிப்பு விழா வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

ஊழலுக்கு எதிரான நாளைய தேசத்தை உருவாக்குவதில் நாம் ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இக்கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர் கௌரீஸ்வரன், வவுனியா முகாமையாளர் செல்வலக்சுமி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார் மற்றும் எழுத்தாளர் சகாயநாதன், சிரேஷ்ட ஊடகவியலாளர் ந. கபில்நாத் மற்றும் இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 165 இளைஞர்கள் பங்குபற்றியிருந்தனர். 

அண்மைய பதிவுகள்