யாழ். மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி முதல் மே மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் போதைப்பொருள் கைதுகள் தொடர்பில் 180 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன்தினம்(30) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.
அதற்கமைய ஹெரோய்ன் போதைப்பொருள் தொடர்பில் 51 வழக்குகளும், ஐஸ் போதைப் பொருள் தொடர்பில் 8 வழக்குகளும், கஞ்சா போதைப்பொருள் தொடர்பில் 121 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தின் யாழ். பொலிஸ் பிராந்தியம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையிலேயே இந்தப் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
