சமஷ்டி, ஐ. நா. தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவும் எமது ஆட்சியில் ஒருபோதும் இடமளியோம் - அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு
5 months ago

சமஷ்டி அரசமைப்புக்கும் ஐ. நா. தீர்மானங்களை நடைமுறைப்படுத் துவதற்கும் எமது ஆட்சியில் ஒருபோதும் இடமளியோம் - இவ்வாறு கூறியுள்ளார் அரசாங்க பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று(06) புதன்கிழமை நடைபெற்றது.
இதில், பங்கேற்ற செய்தியாளர் ஒருவர், சமஷ்டி அரசமைப்பை ஏற்படுத்தவும் ஐ.நா.தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன் அரசாங்கம் பேச்சு நடத்தியதாக உதய கம்மன்பில கூறியுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பேச்சாளர்,
“சமஷ்டி அரசமைப்பையோ அல்லது ஐ. நா. தீர்மானங்களை நடைமுறைப் படுத்தவோ எமது ஆட்சியில் இடமில்லை.
அத்துடன், ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ் அரசுக் கட்சியுடன் பேச்சு எதனையும் நடத்தவுமில்லை”, என்றும் கூறினார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
