கனடாவின் குடிவரவு கொள்கையில் மாற்றம் தேவை என அந்நாட்டின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் குடிவரவு கொள்கையில் மாற்றம் தேவை என அந்நாட்டின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.
குடிவரவு முறைமை மாற்றி அமைக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
பெரும் எண்ணிக்கையிலானவர்கள் புதிதாக நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர் எனவும் இதனால் பல தசாப்தங்களாக காணப்பட்ட குடியேறிகளுக்கான நலன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில நடைமுறைகளில் மாற்றம் செய்வதன் மூலம் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் குடியேறிகள் சனத்தொகை மூன்று வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாகவும் இது கடந்த தசாப்தத்தை விடவும் இரண்டு மடங்கு அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வலுவான ஊழியப்படையொன்றை உருவாக்க குடியேறிகளின் வருகை அவசியமானது என அமைச்சர் மில்லர் தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போதைய நடைமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
